என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உபகார அன்னை
நீங்கள் தேடியது "உபகார அன்னை"
காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா நடந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை, திருப்பலியும், மாலையில் மறையுரை நற்கருணை ஆசீரும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
8-ம் திருநாளன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று இரவு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது.
10-ம் திருநாளான நேற்று காலை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று 6.30 மணிக்கு ஆலய வளாகத்தை தேர் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொது அசனம் நடக்கிறது.
8-ம் திருநாளன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று இரவு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது.
10-ம் திருநாளான நேற்று காலை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று 6.30 மணிக்கு ஆலய வளாகத்தை தேர் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொது அசனம் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் அடிகள் தலைமையில் நடக்கிறது. விழா 10 நாட்கள் நடக்கிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஒவ்வொரு திருநாளிலும் காலை திருப்பலி ஒவ்வொரு மண்டலம் சார்பில், சிறப்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து 8-ம் திருநாளான வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருநாளான 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் திருநாளான 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தேர்பவனியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குகுரு மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஒவ்வொரு திருநாளிலும் காலை திருப்பலி ஒவ்வொரு மண்டலம் சார்பில், சிறப்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து 8-ம் திருநாளான வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருநாளான 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் திருநாளான 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தேர்பவனியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குகுரு மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X